பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் இயற்கை எய்தினார் முதல்வர் இரங்கல்
பிரபல சினிமா பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் (73) தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய மாணிக்க விநாயகம் இதயக் கோளாறு காரணமாக அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் இன்று மாலை காலமானார்.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் இரங்கல் செய்தி விடுத்துள்ளார்.
பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான வழுவூர் மாணிக்க விநாயகம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். எண்ணூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி, துன்பமானாலும் துள்ளலானாலும் தனது குரல்வளத்தால் அவ்வுணர்வுகளைத் துல்லியமாக இரசிகர்களுக்குக் கடத்தி விருந்தளித்தவர் அவர்.
அவரது தந்தை மற்றும் அண்ணனைப் போலவே, தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற அன்பைப் பொழிந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர்.
பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன்.என அவர் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Tags :