தென்காசி மாவட்டத்தின் மீது தனி கவனம் செலுத்தும் கனிமொழி கருணாநிதி எம்.பி.

by Editor / 27-12-2021 10:23:15pm
தென்காசி மாவட்டத்தின் மீது  தனி கவனம் செலுத்தும் கனிமொழி கருணாநிதி எம்.பி.

தென்காசி மாவட்டத்தில் திமுக மகளிரணிச் செயலாளரும்,தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி  இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
தென்காசி - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் பணிமனையில் தி.மு.க கொடியேற்றி, பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார். அதன்பிறகு சிறப்பு உரையாற்றினார். தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் பொ.சிவபத்மநாதன், தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் மா.செல்லதுரை ஆகியோர் உடனிருந்தனர்.தென்காசியில் Drizzle Restaurant & Mini Hall-ஐ திறந்து வைத்தார். சுதந்திரப் போராட்ட தியாகி M . அப்துல் சலாம் நினைவிட ஸ்தூபி திறப்பு திறந்து வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக ஆலங்குளம் சட்டமன்றத்தொகுதி ஆலடிபட்டியில் திமுகவின் முன்னாள் அமைச்சர் மறைந்த ஆலடி அருணாவின் மகன் ஆலடி எழில்வாணன் எழுதிய "எழிவின் எண்ண மின்னல்கள்" நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்நிகழ்வில், தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் பொ.சிவபத்மநாதன், தமிழக சபாநாயகர் அப்பாவு, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் (காங்கிரஸ்), நெல்லை கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.


 

தென்காசி மாவட்டத்தின் மீது  தனி கவனம் செலுத்தும் கனிமொழி கருணாநிதி எம்.பி.
 

Tags :

Share via