காது வலி பறந்து விடும்

by Admin / 27-01-2022 02:42:30pm
 காது வலி பறந்து விடும்

பொதுவாக குளிர்காலத்தில் நம்மில் பலருக்கு சளித்தொல்லை ஏற்படும் இதனால் காதுகளில் அவதிப்படுவது உண்டு.
 சிலருக்கு காதில் அதிக அழுக்கு சேர்வதால் காதுவலி வரும். சிலருக்கு குளிக்கும் பொழுது காதில் நீர் சென்றுவிடும், அதனால் வலி வருகின்றது. மேலும் உடலில் சளி அதிகமானால் காதுவலி வரும். உடல் சூடு அதிகமானால் காது வலி வரும். காதுவலியால் அவதிப்படுபவர்கள் பலவிதமான மருத்துவ முறைகளை பின்பற்றி வருகிறார்கள். 
இதில் சிலநேரங்களில் பல பக்க விளைவுகளும் ஏற்படுவதுண்டு. எந்தவிதமான மருந்து மாத்திரை இல்லாமல் காது வலியை மிக எளிதாக குணப்படுத்த சித்தர் பெருமக்களால் கண்டறியப்பட்ட நமக்கு அருளிய அருமையான தெய்வீக முத்திரை தான் சூன்ய முத்திரை...இந்த முத்திரையை செய்தால் காது வலி பறந்து விடும்

காதுவலி இல்லாதவர்களும் இதனைப் பயிலுங்கள். காதில் உள்ள நரம்புகள் பலப்படும். எவ்வளவு வயதானாலும் காதுவலி வராமல் தடுக்கப்படும். இன்றைய நவீன உலகில் மன அழுத்தம், டென்ஷன், படபடப்பினால் கழுத்து நரம்புகளுக்கு இரத்தம் சரியாகச் செல்லாமல் கழுத்து வலி வரும். மூளையிலிருந்து பிரியும் சிந்தனையைத் தூண்டும் நரம்புகள் அதிக சிந்தனையினால் இரத்த ஓட்டம் சரியாகச் செல்லாமல் பாதிக்கப்பட்டு அதனால் கழுத்துவலி வரும்.

ஓசை பேரிரைச்சல் சப்தங்கள் இதனால் மட்டும்தான் காது வலி வரும் என்பதாக இருந்தாலும்... வேறுவிதமான வினோதமான வலிகளும் நமக்கு அவ்வப்போது ஏற்படுகிறது அவைகளில் அவைகளில்..
இருசக்கர வாகனம் அதிகம் ஓட்டினால் கழுத்துவலி வரும். கம்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலி வரும். அதிகமான எடையை சுமந்தால் கழுத்து வலி வரும். இந்த கழுத்துவலிக்கு பல மருந்துகள் சாப்பிட்டும் நிரந்தர தீர்வு கிடைக்காமல் கழுத்து வலியுடன் மனதில் கவலை என்ற வலியும் வந்துவிடுகின்றது. அவர்கள் இனி கவலைப்பட வேண்டாம். நம்பிக்கையுடன் தினமும் பதினைந்து நிமிடங்கள் காலை, மதியம், மாலை மூன்று வேளைகள் பயிற்சி செய்யுங்கள். கழுத்துப் பகுதி நரம்புகள் பலப்படும். கழுத்துவலி நீங்கும். கவலை வேண்டாம்.
அத்தனை வழிகளையும் நீக்கி அற்புத பலன்களைத் தரும் சூன்ய முத்திரையை எப்படி செய்வது...?

சூன்ய முத்திரை செய்முறை

முதலில் நல்ல சுத்தமான காற்றோட்டம் உள்ள இடத்தில் தரையில் ஒரு கோரைப் பாய் அல்லது மேட் எனும் இதமான விரிப்பான் விரித்து அதில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். 
வழக்கம்போல் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். மூன்று முதல் ஐந்து முறை மூச்சை இரு நாசி வழியாக மிக மெதுவாக இழுத்து, மிக மெதுவாக வெளிவிடவும். பின் நமது நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டைவிரலால் இலேசாக அழுத்தம் கொடுக்கவும். மீதி விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும் (படத்தை பார்க்க) இந்த நிலையில் முதலில் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். ஒரு பதினைந்து நாட்கள் கழித்து பத்து நிமிடங்கள் இருக்கவும். செய்து முடித்தவுடன் கை விரல்களை சாதாரணமாக வைத்து ஓரு நிமிடம் கண்களை மூடி மூச்சை மட்டும் கவனிக்கவும். பின் எழுந்து விடலாம்.

இந்த முத்திரை செய்யும் பொழுது கவனிக்க வேண்டியவை

முத்திரை செய்யும் பொழுது கவனம், சிந்தனை வேறெங்கும் செல்லக் கூடாது. அதற்கு உங்கள் கவனத்தை விரலில் கொடுக்கும் அழுத்தத்தில் நிலை நிறுத்தவும். நம்பிக்கையுடன் செய்யுங்கள். முத்திரையில் இருக்கும் பொழுது உங்கள் மூச்சோட்டத்தை தியானிக்கலாம் அல்லது உன்னிப்பாக கவனிக்கலாம். முத்திரையை தனிமையில் அமர்ந்து செய்யுங்கள். பயிற்சியின் பொழுது பேசக்கூடாது. குறிப்பாக உங்கள் கைபேசி எனும் செல்போனில் சுவிட்சை ஆப் செய்துவிடவும்.

இது ஒரு தெய்வீகக் கலை. நம் உடம்பில் உள்ள அற்புத ஆற்றலை வளர்க்கும் கலை. நம் சித்தர்கள் பல வருடங்கள் தவம் செய்து உடலை ஆராய்ச்சி செய்து நரம்பு மண்டலங்கள் சிறப்பாக இயங்கச் செய்ய அருளிய அருமையான கலை என்பதை உள்ளத்தில் நிறுத்தி நிதானமாக, பொறுமையாக, அன்புடன் பயிற்சி செய்யுங்கள்.

முதலில் நாம் நம்மையே காதலிக்க வேண்டும் அதாவது நமது உடல் உறுப்புகளை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். 
நம் கையில் எதுவும் இல்லை என்று எப்போதும் சொல்ல வேண்டாம்.
 நம் கைவிரல்களில் பல அற்புதங்கள் உண்டு என்ற நம்பிக்கையுடன்..
நமது உடலை, உடல் உறுப்புக்களை நேசிக்கும் அற்புதக்கலைதான் இந்த முத்திரையாகும். சூன்ய முத்திரையை செய்து அனைவரும் இளமையுடன் அழகுடன், அழகாக வாழுங்கள்...

 

Tags :

Share via