அதிமுகவில் மீண்டும் சசிகலா-தினகரன் சேர்ப்பு..?
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் இன்று நடைபெற்ற கழக நிர்வாகிகளுடன் உண்டான ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்க தேனி மாவட்டத்தின் ஒட்டுமொத்த குரலாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்விகள் மற்றும் இதர தேர்தல்களில் அதிமுக தோல்வியைத் தழுவி வந்ததை மையப்படுத்தியும், இனி வரும் காலங்களில் எந்த தேர்தல்களிலும் அதிமுகவின் வெற்றியைத்தவிர அ.தி.மு.க,தொண்டர்கள் வேறு எதையும் சிந்திக்க கூடாது என்றும்,அதிமுகவிலிருந்து இருந்து பிரிந்து சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரை தங்களுடன் இணைத்து கழகப் பணியாற்ற வேண்டும் என்று ஒட்டுமொத்த குரலாக இன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் அதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மீண்டும் அதிமுகவில் சசிகலா-தினகரன் குரல்கள் ஒலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tags : Sasikala-Dinakaran rejoin AIADMK