மாணவன் மாயமான தினத்தில் ஆசிரியையும் மாயம்-காவல்துறை விசாரணை

by Editor / 13-03-2022 07:35:09pm
மாணவன் மாயமான தினத்தில் ஆசிரியையும்  மாயம்-காவல்துறை விசாரணை

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவன் ஒருவர் 11ஆம் வகுப்பு  படித்து வருகிறார். 17 வயதான இவர் கடந்த 5ம் தேதி பள்ளிக்கு சென்ற நிலையில் மாலை வீட்டுக்கு சென்டர் அவர் பின்னர் வீட்டில்  விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். விளையாட சென்ற மாணவன் மறுபடியும் வீடு திரும்பவில்லை.  அவனது பெற்றோர் பல இடங்களில் தேடியும், நண்பர்களின் வீடுகளிலும் சென்று பார்த்துள்ளனர். ஆனால் மாணவன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதேசமயம் மாணவன்  காணாமல் போன சமயத்தில் அதே பள்ளியில்  26 வயதுடைய ஆசிரியை ஒருவரும்  மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில்தனது மகனை காணவில்லையென புகார் அளித்தனர்.  புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தியதில்  மாணவன் மாயமான அதே நாளில் ஆசிரியையும் மாயமானதை  உறுதி செய்தனர். 
அத்துடன் ஆசிரியை காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் புகார் அளிக்கவில்லையென்று கூறப்படுகிறது.ஆசிரியை குறைத்து அவரது பெற்றோர் புகார் அளிக்காதது காவல்துறையினருக்கு கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. துறையூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஆசிரியை எம்ஏ., பிஎட்., படித்துவிட்டு கடந்த 6 ஆண்டுகளாக பள்ளியில் பணிபுரிந்து வருவதாகவும் , ஆசிரியையும் , மாணவரும் ஒரேநாளில் மாயமாகி உள்ளதால் இருவரும் சேர்ந்தே சென்றிருக்கலாம் எனவும்  போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.மாணவனின் பெற்றோர்கொடுத்த புகாரின் அடிப்படையில் மாணவனை தேடும் பணியினை காவல்துறையினர்  துரிதப்படுத்தியுள்ளனர்.
 

 

Tags : The magic-police investigation of the teacher on the day of the student magic

Share via