பயங்கரவாதிகளுடன் போலீசார் கடும் துப்பாக்கி சண்டை

by Admin / 16-03-2022 11:16:57am
 பயங்கரவாதிகளுடன் போலீசார் கடும் துப்பாக்கி சண்டை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்று வருகின்றனர். நேற்று அவந்தி போரா மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இந்தநிலையில் ஸ்ரீநகர் நவ்கான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக இன்று காலை பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படை போலீசார் அங்கு விரைந்து சென்று பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் மீது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் பயங்கரவாதிகளை நோக்கி சுட்டனர். அவர்களுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

இதில் பயங்கரவாதிகள் யாரேனும் இறந்தார்களா? என்பது பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
 

 

Tags :

Share via