4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின் சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.
தமிழக சட்டமன்றத்தில் கடந்த 6ம் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதுவரை10க்கும் மேற்பட்ட துறைகள் மீது விவாதம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என, சட்டமன்றத்திற்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.4 நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது. இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது.
Tags :