தங்க நகையை 95 சதவீதம் தள்ளுபடி விலையில் மிரட்டி வாங்கிய டிஜிபி

by Staff / 04-05-2022 03:43:55pm
தங்க நகையை 95 சதவீதம் தள்ளுபடி விலையில் மிரட்டி வாங்கிய டிஜிபி

நகைக் கடைகளில் 7 பவுன் தங்க நகையை 95 விழுக்காடு தள்ளுபடி விலையில் மிரட்டிப் பெற்றதாக வந்த குற்றச்சாட்டில் கேரள டிஜிபி மீது விசாரணை நடத்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் சிறைத்துறை டிஜிபி யாக இருக்கும் சதீஷ்குமார் திருவனந்தபுரத்தில் ஒரு நகைக்கடையில் 7 பவுன் தங்கச்சங்கிலியை 95 விழுக்காடு தள்ளுபடி விலையில் தர வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. நகை கடை ஊழியர்கள் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்க முன்வந்து அவர்களை டிஜிபி மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மறுநாளும் இதே போல் கடைக்குச் சென்று மிரட்டியபோது உரிமையாளர் தலையிட்டு 95 விழுக்காடு தள்ளுபடி விலையில் நகையை வழங்கியதுடன்அதில் பில்லும்  பதிவு செய்துகொண்டார். இது குறித்து உரிய சான்றுகளுடன் கேரள முதலமைச்சர்  அலுவலகத்துக்கு நகைக்கடை உரிமையாளர் புகார் அளித்தார். இதனை பரிசீலித்த உள்துறை விசாரணைக்கு பரிந்துரைத்து உள்ளதாகவும் வெளிநாடு சென்றுள்ள கேரள முதலமைச்சர் திரும்பியபோது இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via