குடிபோதையில் சாலையில் விழுந்து கிடந்த முதியவரையும் அவரிடம் கிடந்த 22 ஆயிரம் பணத்தையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்த மூன்று சிறுவர்கள்

by Staff / 06-05-2022 04:53:07pm
குடிபோதையில் சாலையில் விழுந்து கிடந்த முதியவரையும்  அவரிடம் கிடந்த 22 ஆயிரம் பணத்தையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்த மூன்று சிறுவர்கள்

குடி போதையில் சாலையில் விழுந்துகிடந்த முதியவரையும்  அவர் அருகே கடந்த 22 ஆயிரம் ரூபாய் பணத்தையும்  காவல்நிலையத்தில் ஒப்படைத்த மூன்று சிறுவர்களை அண்ணாநகர் துணை கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டினார். கமலக்கண்ணன் என்ற அந்த முதியவர் அண்ணா நகர் பேருந்து நிலையம் அருகே இரவில் சுயநினைவு இல்லாமல் விழுந்ததாக கூறப்படுகிறது அப்போது அவ்வழியாக குடும்பத்தாருடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அவரை மீட்டு அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முதியவருக்கு அறிவுரை கூறிய போலீசார் அவரது பணத்தையும் கொடுத்து அனுப்பினார். இதனை அடுத்து சிறுவர்கள் செயலை பாராட்டும் விதமாக அண்ணாநகர் துணை கமிஷனர் சிவபிரசாத் அவர்களின் நேரில் அழைத்து பாராட்டி இனிப்பு வழங்கி ஊக்கப்படுத்தினார்.

 

Tags :

Share via