தமிழகம் முழுவதும் 4,500 சிறப்பு பஸ்கள்
தமிழகம் முழுவதும் 4,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து 1,500 சிறப்பு பஸ்களும், கோவை, திருச்சி, சேலம், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 3,000 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும் எனவும், இரண்டு நாட்களும் இரவு நேரங்களிலும் முழுமையாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதனிடையே ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதியும், தமிழக அரசின் உத்தரவை ஏற்றும் (மே 22,23) தமிழகத்துக்குள் ஆம்னி பஸ்கள் இயங்கும் என தெரிவித்து உள்ளது.
Tags :