சென்னையில் கடன் தருவதாகக் கூறி புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று மோசடி
அடுத்த அம்பத்தூர் கடன் அம்பத்தூரில் கடன் தருவதாக கூறி புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாதனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவன்: இன்சண்ட ஆப்பு மூலம் கடன் வேண்டுமா என அவரிடம் கேட்டுள்ளார் .30 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என அப்பெண் தெரிவிக்கவே புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளான். தொடர்ந்து தொடர்பு கொண்டு கடன் தொகை தயாராகி விட்டதாகவும் முன்னதாக மூவாயிரம் ரூபாய் முன்பணம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு அவரது புகைப்படத்தை தவறாக சித்தரித்து அவரின் உறவினர்கள் நண்பர்கள் அனுப்பியுள்ளனர் இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் அதிக அளவிலான வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
Tags :