ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி.தலைமறைவானவரை மடக்கி பிடித்த மக்கள்.

by Editor / 05-06-2022 11:49:07am
 ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி.தலைமறைவானவரை மடக்கி பிடித்த மக்கள்.

 செங்கல்பட்டு மாவட்டம்  பொத்தேரியைச் சேர்ந்த மூர்த்தி- புனிதா தம்பதியினரிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் ஏலச்சீட்டு கட்டியுள்ளனர். கொரோனா ஊரடங்கின் போது ஏலச்சீட்டு பணத்தை முறையாக பலர் கட்டாததால் மூர்த்தியால் மற்றவர்களுக்கு  பணம் அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், 2 கோடி ரூபாயுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  குடும்பத்துடன் தலைமறைவாகியிருந்தார். 
பொத்தேரியில் ஏலச்சீட்டு நடத்தி 2கோடி ரூபாய் மோசடி செய்து  தலைமறைவான அவரை சீட்டு போட்டவர்கள் தேடிவந்த நிலையில் ஓரகரடம் பகுதியில் அவர் வீடு எடுத்து தங்கி இருப்பதை அறிந்த பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags : Rs 2 crore fraud by holding lottery tickets.

Share via