தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

by Editor / 24-06-2022 04:38:02pm
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாளகத்தில் 27.06.2022 அன்று காலை 11:00 மணிக்கு நடைப்பெறவுள்ளது

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்ததை சார்ந்த அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை-நகல், குடும்ப அட்டை-நகல், ஆதார் அடடை-நகல், வாக்காளர் அட்டை-நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ், இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்

 

Tags :

Share via