7-ம் தேதி வாரணாசிக்கு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

by Editor / 05-07-2022 12:40:05pm
 7-ம் தேதி வாரணாசிக்கு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

7ம் தேதி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்லும் பிரதமர் மோடி, ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.அன்றைய தினம் வாரணாசியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர், மதியம் 2 மணி அளவில் எல்.டி. கல்லூரியில் அட்சய பாத்திரம் மதிய உணவு சமையல் அறையை தொடங்கி வைக்கிறார்.
பின்னர் மதியம் 2.45 மணியளவில் ருத்ராக்சம் பகுதியில் உள்ள சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை மையத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு, தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் அகில பாரதீய ஷிக்சா சமகம் திட்டத்தினை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில், சிக்ராவில் உள்ள சம்பூர்னானந்த ஸ்டேடியத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
 

 

Tags :

Share via