இளம்பெண் செல்பி எடுத்த போது அதில் தவறி விழுந்து உயிரிழப்பு உரிய அனுமதியின்றி இயக்கிய தனியார் தங்கும் விடுதிக்கு சீல்

by Editor / 18-07-2022 01:16:25pm
இளம்பெண் செல்பி எடுத்த போது அதில் தவறி விழுந்து உயிரிழப்பு உரிய அனுமதியின்றி இயக்கிய தனியார் தங்கும் விடுதிக்கு சீல்


 நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் அனுமதியில்லாமல் இயங்கிய தனியார் தங்கும் விடுதிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வினிதா சாவித்ரி என்ற ஐடி நிறுவன ஊழியர் சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் கல்லட்டி மலைப்பாதையில் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்  அறையில் ஆற்றோரத்தில் நின்று செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த விடுதி உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via