மாணவியின் பிரேத பரிசோதனை மருத்துவர்கள் குழுஅமைப்பு

by Editor / 22-07-2022 09:57:45pm
மாணவியின் பிரேத பரிசோதனை மருத்துவர்கள் குழுஅமைப்பு

கள்ளக்குறிச்சி மாணவியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3 ஜிப்மர் மருத்துவர்கள் கொண்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷ குமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.ஒரு மாதத்தில் ஜிப்மர் குழு தனது அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 

Tags : The team of post mortem doctors of the student

Share via