ஜனநாயக பயணத்தில் இந்திய மக்களுடன் அமெரிக்காவும் இணைகிறது-அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

by Editor / 15-08-2022 03:51:28pm
ஜனநாயக பயணத்தில் இந்திய மக்களுடன் அமெரிக்காவும் இணைகிறது-அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ஏறக்குறைய 40 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள், ஆகஸ்டு 15ம் தேதி அன்று 75வது ஆண்டு விடுதலை கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். மகாத்மா காந்தியின் உண்மை மற்றும் அகிம்சை ஆகியவற்றின் உறுதியான செய்தியை வழிகாட்டியாக கொண்ட ஜனநாயக பயணத்தில் இந்திய மக்களுடன் அமெரிக்காவும் இணைகிறது என தெரிவித்துள்ளார். இந்திய அமெரிக்க சமூகத்தினர், அமெரிக்காவை அதிக புதுமையான, எல்லாவற்றையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான ஒரு நாடாக உருவாக்கி உள்ளனர் எனவும், இந்த ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் 75வது ஆண்டு தூதரக உறவு கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகிறது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via