துரோகம் செய்தவர்களுக்கு என்றும் மன்னிப்பே கிடையாது- சிஆர் சரஸ்வதி

by Editor / 15-08-2022 11:22:07pm
துரோகம் செய்தவர்களுக்கு என்றும் மன்னிப்பே கிடையாது- சிஆர் சரஸ்வதி

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அமமுக பொதுக்‍குழு கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அமமுக பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அதிமுக நிர்வாகியும் நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பொதுக் குழுக்கூட்டத்தில் பேசிய  நடிகை  சி.ஆர்.சரஸ்வதி ,"துரோகம் என்ற சொல் உலகில் இருக்கும்வரை, முட்டிபோட்டு முதலமைச்சரான எடப்பாடியை மறக்க முடியாது. துரோகம் செய்தவர்களுக்கு என்றும் மன்னிப்பே கிடையாது நிச்சயம் அதிமுக முழுமையாக கைப்பற்றப்படும் அப்போது துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும்  நடிகையுமான சிஆர் சரஸ்வதி" பேசினார்.

 

Tags :

Share via