ஸ்ரீ அரவிந்தர் பிறந்தநாள்-பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் புகழாரம்
ஸ்ரீஅரவிந்தரின் பிறந்தநாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இன்று ஸ்ரீஅரவிந்தரின் ஜெயந்தி. புத்திகூர்மையுடன் அவர் நமது நாட்டைப்பற்றி தெளிவான பார்வையை கொண்டிருந்தார். அவருடைய கல்வி, அறிவுசார் திறன், துணிச்சல் ஆகியவற்றுடன் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கிறார். புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் அவருடன் தொடர்புள்ள இடங்களுக்கு நான் மேற்கொண்ட பயணம் குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளேன். மனதின் குரல் நிகழ்ச்சி ஒன்றில், தன்னிறைவு மற்றும் கற்றல் தொடர்பான ஸ்ரீஅரவிந்தரின் சிந்தனைகள் பற்றி நான் எடுத்துரைத்துள்ளேன்" குறிப்பிட்டுள்ளார்.
Tags :