இஸ்லாமிய இளைஞர்களை பயங்கரவாதி ஆக்கி நாடகம் சர்ச்சையில் சிக்கிய பள்ளி

by Editor / 17-08-2022 01:44:07pm
இஸ்லாமிய இளைஞர்களை பயங்கரவாதி ஆக்கி நாடகம் சர்ச்சையில் சிக்கிய பள்ளி

பஞ்சாப் மாநிலத்தில், பள்ளி குழந்தைகளின் சுதந்திர தின நாடகத்தில் இஸ்லாமிய இளைஞர்களை 'பயங்கரவாதி' ஆக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இஸ்லாமிய இளைஞரை பயங்கரவாதியாக சித்தரித்து பஞ்சாப் பள்ளி மாணவர்கள் நடத்திய சுதந்திர தின நாடகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள பூலாத் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது, ​​பள்ளி மாணவர்கள் வெள்ளைத் தொப்பி அணிந்த இஸ்லாமிய இளைஞர் ஒருவரை பயங்கரவாதியாக சித்தரித்து நாடகம் நடத்தினர்.இது மக்களை கொதிப்படையச் செய்ததுடன், கடும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பயங்கரவாதிகளாக சித்தரித்த இந்த நாடகத்திற்காக மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via