கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை 40% வரை உயர்வு!
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை 40% வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரூ.370 ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.520 ஆக உயர்ந்துள்ளது. ஒரு டன் ஸ்டீல் கம்பி ரூ.68,000 ரூபாயிலிருந்து ரூ.75,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. ரூ.3800ஆக இருந்த ஒரு யூனிட் மணல் தற்போது ரூ.5200 ஆக உயர்ந்துள்ளது. ஜல்லி ஒரு யூனிட் 3,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை 20% முதல் 30% வரை உயர்ந்துள்ளது.
எலட்ரிக் பொருட்களின் விலை 30% வரை உயர்ந்துள்ளதாக கட்டுமான பொறியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக அரசு விலை நிர்ணயக்குழுவை அமைக்க வேண்டும் என கட்டுமான பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை 40% வரை அதிகரித்துள்ளது.
Tags :