சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து
தனியார் மெட்ரிக் பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்தில் பள்ளி மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர் அரக்கோணத்தில் தனியாருக்கு சொந்தமான மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை வீட்டிலிருந்து அழைத்து வர பேருந்து சென்றது இன்று காலை சேந்தமங்கலம் பகுதியில் இருந்து 5 மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. ரயில்வேகேட் அருகே பேருந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது. ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு 5 மாணவ மாணவிகளுடன் கீழே இறங்கியதால் காயமின்றி தப்பினர்.
Tags :