நெல்லையில் இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக போஸ்டர்

by Editor / 10-06-2021 06:16:22pm
நெல்லையில் இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக போஸ்டர்

 

.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக  (ஜுன் 9) தொண்டர்கள் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர். அதில், "பன்னீர்செல்வத்தின் ஆலோசனைகளை கேட்டு முடிவு எடுக்காததால் தேர்தலில் தோற்றுப்போனோம். இனியும் இந்த நிலை நீடித்தால் அதிமுக தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும் சுவரொட்டியில் மானூர் ஒன்றிய அதிமுக கழகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பல்வேறு குழப்பங்களுக்கிடையே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே திருநெல்வேலியில் அதிமுக தொண்டர்களின் சுவரொட்டிகளால் பெரும் பரபரப்பு நிலவியது.
 இந்த சூழ்நிலையில் (ஜுன் 10) மாநகர் முழுவதும் மீண்டும் அதிமுக தொண்டர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதேசமயம் இம்முறை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதில், "எதிர்கட்சி தலைவராக கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தேர்ந்து எடுத்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு நன்றி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள், புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
 

 

Tags :

Share via