கல்லணையில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதல்வர் பார்வையிட்டார்!

by Editor / 11-06-2021 12:51:31pm
கல்லணையில் நடைபெறும்  தூர்வாரும் பணிகளை முதல்வர்  பார்வையிட்டார்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணையில் நடைபெறும் பராமரிப்பு பணி களையும், மாவட்டத்தின் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் சுமார் 122 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (11ம் தேதி) காலை ஆய்வு செய்து நடைபெற்று வரும் பணிகள், அதன் தரம் குறித்து அலுவலர்களிடமும் கேட்டறிந்தார். பின்னர் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார். தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் வல்லம், முதலை முத்து வாரி தூர்வாரும் பணியையும், பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இளைஞர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலைமை கொறடா கோவி. செழியன், எம்பிக்கள் தஞ்சாவூர் பழனி மாணிக்கம், திருச்சி சிவா, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிஆர்பி ராஜா, நீர்ப்பாசனத் துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, தூர்வாரும் பணி கண்காணிப்பாளர் பிரதீப் யாதவ், மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.தொடர்ந்து வல்லத்தில் உள்ள முதலைமுத்துவாரி வடிகாரில் நடக்கும் தூர்வாரும் பணிகளையும் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

 

Tags :

Share via