சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட நாய்கள்
அசாம் மாநிலம் கோலக்காட் மாவட்டம் போகாங்கட் பகுதியில் சாலையில் சாக்கு மூட்டைகளில் 31 நாய்கள் கட்டப்பட்டு கேட்பாரற்று கிடந்தன. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து, போலீசார் சென்று பார்த்தபோது அங்கு மூட்டைகளில் கட்டப்பட்டு நாய்கள் கிடந்தன.
இதனையடுத்து விலங்கின ஆர்வலர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் நாய்களை மீட்டு உணவு அளித்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் வாகனம் பழுது அடைந்ததால் நாய்களை சிலர் சாலையில் வீசிவிட்டு சென்றதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இறைச்சிக்காக நாய்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :