சிக்கன் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் பலி
திருவாரூர் புலிவலம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது ஐந்து மாத கர்ப்பிணி மனைவிக்கு மருந்து கொடுக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 20-க்கும் மேற்பட்டோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 15 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், வேலங்குடி பகுதியைச் சேர்ந்த செல்வம், முருகன், மாரியம்மாள் செல்வகணபதி, பாலாஜி, சந்துரு ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வமுருகன் என்பவர் உயிரிழந்தார்.
Tags :