50 வயது பழங்குடியினப் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த 2 காவலர்கள் கைது.

by Editor / 08-10-2022 08:42:21am
50 வயது பழங்குடியினப் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த 2 காவலர்கள் கைது.

ஜார்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டம் செரெங்டாக் காவல் நிலையப் பகுதியை சேர்ந்த 50 வயது பழங்குடியினப் பெண் தனது குடியிருப்புக்கு அருகே புல் வெட்டச் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த 2 காவலர்கள் அவரை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.அதன்பின் அவரது பிறப்புறுப்பை சிதைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின் அருகிலிருந்தவர்களால் மீட்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அக்.5ஆம் தேதி நடந்துள்ளது. இந்த நிலையில் அந்த காவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags : பழங்குடியினப் பெண்ணை கூட்டுப்பாலியல்செய்த 2 காவலர்கள் கைது.

Share via