பேருந்தின் மீது கேஸ் டேங்கர் மோதி கோர விபத்து

by Staff / 28-10-2022 04:32:44pm
பேருந்தின் மீது கேஸ் டேங்கர் மோதி கோர விபத்து

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது எரிவாயு டேங்கர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலம் தம்கா மாவட்டத்தில் நடந்துள்ளது.
மாநில நெடுஞ்சாலை 17ல் தவதாந்தரிலிருந்து ஹன்ஸ்திஹா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் அம்பர் லக்ரா தெரிவித்தார். டேங்கர் வெடிவிபத்தைத் தவிர, ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டிருந்த 3 பேருந்துகள் எரிந்து நாசமானது. ஏராளமான மரங்களும் எரிந்து நாசமானது.டேங்கர் லாரி கவிழ்ந்ததில் வெடி விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 பேருந்துகள் மற்றும் பல மரங்களும் எரிந்ததாக காவல் ஆய்வாளர் நவல் கிஷோர் சிங் தெரிவித்தார். இந்த விபத்தில் ஒருவர் உடல் கருகி பலியானதாகவும், மற்றொருவர் படுகாயமடைந்ததாகவும் அவர் கூறினார். இறந்தவர் அடையாளம் காணப்படவில்லை. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags :

Share via