தொடரும் பாலியல் வன்கொடுமைகள்

by Staff / 30-10-2022 04:23:17pm
 தொடரும் பாலியல் வன்கொடுமைகள்

சென்னையில் அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த சிறுமி அடிக்கடி வயிற்று வலி என்று சொன்னதால் அவரது தாயார் தனது மகளை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சிறுமிக்கு நடந்த பரிசோதனையில் அவர் நாலு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

மருத்துவர்கள் இதை சொன்னதும் சிறுமியின் தாயார் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.   அப்போது மகளிடம் அது குறித்து விசாரித்த போது வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன் தான் அதற்கு காரணம் என்று சொல்லி இருக்கிறார்.  

இதை அடுத்து சிறுமியின் தாயார் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.  அந்த புகாரில் போலீசார் வெங்கடேசனிடம் நடத்திய விசாரணையில்,  இதில் மேலும் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.   வெங்கடேசன் நண்பர் வேங்கையன் என்ற வாலிபரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.

இதற்கு வெங்கடேசனின் தாயார் விஜயாவும் சகோதரி லலிதாவும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.   அந்த சிறுமியை பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்கள்.   இதை அடுத்து போலீசார் நாலு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via