தீவிரவாத தடுப்பு பிரிவு தொடக்கம்

by Staff / 11-11-2022 01:48:01pm
 தீவிரவாத தடுப்பு பிரிவு தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்து 102 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களின் உறைவிடங்களில் காவல்துறை ரகசியமாக சோதனையிட்டது. அவர்களில் 90 பேரிடம் காவல்துறை விசாரணையை நடத்தி முடித்துள்ளது. நேற்று சென்னையில் 5 இடங்களில் சோதனை நடைபெற்றதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர.இந்த கார் வெடிப்பு சம்பவத்தால் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. காவல்துறை கூடுதல் இயக்குனர் அல்லது ஐ.ஜி. தலைமையில் இந்த பிரிவு விரைவில் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via