பழனியில் தரிசனம் செய்த பின் தம்பதி தற்கொலை
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரகு, உஷா என்ற தம்பதியினர் பழனியில் உள்ள சுப்பிரமணிய சுவாமியை தரிசித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் வியாழக்கிழமை பழனியில் உள்ள ஓட்டல் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், போலீசாருக்கு தகவல் கொடுத்த ஊழியர்கள், கதவை உடைத்து பார்த்தபோது, இருவரும் சடலமாக கிடந்தனர்.உறவினர்களின் சித்ரவதையால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக எழுதிய தற்கொலைக் கடிதம் கைப்பற்றப்பட்டது.
Tags :