கோழிக்கு பதிலாக புறா பிரியாணி

by Staff / 29-11-2022 11:53:05am
கோழிக்கு பதிலாக புறா பிரியாணி

மும்பையில் புறாக்களை வளர்த்து பார்கள் மற்றும் உணவகங்களுக்கு விற்பனை செய்வதாக காவல்துறைக்கு புகார் வந்தது. சியோன் காவல் நிலையத்தில் அபிஷேக் சாவந்த் என்பவர் புறாக்களை வளர்த்து உணவகங்களுக்கு விற்பனை செய்வதாக ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஹரிஷ் (71) போலீசில் புகார் செய்தார். மேலும், சிக்கன் பிரியாணிக்கு பதில் மோசடி செய்து புறா இறைச்சியை கலந்துகொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கட்டிடத்தின் மேற்கூரையில் புறாக்கள் வளர்க்கப்பட்டு மும்பையில் உள்ள சில ஹோட்டல்களுக்கு விற்கப்படுவதாக போலீஸ் புகார் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த ஆணையம், புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய சியோன் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. அதன் பிறகு, சியோன் காவல் நிலையம் குற்றவாளி மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது பற்றி அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

 

Tags :

Share via