பெண் கர்ப்பம்: திருமணம் செய்ய மறுத்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை

by Staff / 01-12-2022 11:44:51am
பெண் கர்ப்பம்: திருமணம் செய்ய மறுத்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அழகுராஜ். இவர் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அதே ஊரை சேர்ந்த பெண் ஒருவரை கர்ப்பமாக்கி உள்ளார். ஆனால் அவர் கர்ப்பமானது தெரிந்து திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் அந்த பெண் காவல்நிலையத்தில் அழகுராஜ் மீது புகாரளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அழகுராஜை கைது செய்து மகளிர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தினர். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் அழகுராஜ் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

 

Tags :

Share via