கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வடமாநில பெண் திடீர் மரணம்

by Staff / 01-12-2022 01:56:29pm
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வடமாநில பெண் திடீர் மரணம்

மராட்டிய மாநிலம் , கமலாபார்க் என்ற இடத்தைச் சேர்ந்த மாதவ் தேசாய். இவருடைய மனைவி தனுஜா தேசாய் என்ற ரோகினி மாதவ் தேசாய் ( வயது 57 ). இவர் உறவினர்களுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார். கடந்த 29 - ந்தேதி கன்னியாகுமரி வந்த இவர் , இங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் , ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே தனுஜா தேசாய் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via