நெல்லை அருகே வாலிபர் வெட்டிக்கொலை போலீஸ் குவிப்பு

by Editor / 26-06-2021 07:04:17pm
நெல்லை அருகே வாலிபர் வெட்டிக்கொலை போலீஸ் குவிப்பு

 

நெல்லை மாவட்டம் தாழையூத்தை  அடுத்துள்ளது ராஜவல்லிபுரம் ஊரைச் சேர்ந்தவர் பாபு (வயது 45) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் பாபு அங்குள்ள பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவரை சுற்றி வளைத்த கும்பல்  சரமாரியாக வெட்டியது. இதில் அவர் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தாழையூத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு பாபு உடலை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக பாபு வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது இதுகுறித்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை உடனடியாக பிடிக்கமாவட்ட எஸ்பி மணிவண்ணன் நிறுத்தப்பட்டனர் அங்கு பதட்டம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

 

Tags :

Share via