மாண்டஸ் புயல் எதிரொலி:காலைமுதல் பலத்த காற்றுடன் பரவலாக மழை

by Editor / 09-12-2022 08:36:02am
மாண்டஸ் புயல் எதிரொலி:காலைமுதல் பலத்த காற்றுடன் பரவலாக மழை

மாண்டஸ் புயல் எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ள 34 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.ஏற்கனவே, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலைமுதல் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, மெரினா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

 

Tags :

Share via