செல்லூர் ராஜூக்கு செந்தில் பாலாஜி பதிலடி

by Editor / 27-06-2021 08:45:32pm
செல்லூர் ராஜூக்கு   செந்தில் பாலாஜி பதிலடி

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “அணிலால் மின்தடை ஏற்படுவதாக கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு தர வேண்டும். செந்தில் பாலாஜியின் கண்டுபிடிப்பால் மீடியாக்களிடமிருந்து நல்லவேளை நான் தப்பித்து விட்டேன். எங்கள் ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள் தற்போது மின்கம்பிகளில் சென்று கொண்டிருக்கின்றன” என்றார். செல்லூர் ராஜூக்கு நெட்டிசன்கள் வைத்த பெயர் தெர்மகோல் ராஜூ என்பது அனைவருக்கும் தெரியும். அதைத் தான் அவர் சொல்லியிருக்கிறார்.

ஆலங்குளம் துணை மின் நிலையத்து மின் பிரச்சினைகளுக்கு அணில்கள் காரணமென, 2020ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் அப்போதைய அதிமுக அரசு அளித்த விளக்கம் இது. பார்க்க படித்தவர் போலிருக்கும் @SellurKRajuoffl இதைப்பற்றி @PThangamanioffl யிடமோ உயர்நீதி மன்றத்திடமோ கேட்டு புத்தி தெளிய வேண்டுகிறேன்

இதற்கு தக்க பதிலடி கொடுத்து ட்வீட் செய்திருக்கிறார் செந்தில் பாலாஜி. அந்த ட்வீட்களில், “நாகையில், அணில் ஓடியதால் மின்கம்பிகள் உரசி விபத்து – மின்கம்பியை சீரமைக்கும் பணியில் TNEB ஊழியர்கள். மதுரை தெர்மாகோல் சயிண்டிஸ்ட் செல்லூர் ராஜூ இந்த செய்தியை பார்த்த பின் நேரில் வந்து மின் கம்பிகளை பிடித்து ஆய்வு செய்ய அழைக்கின்றோம்.
மதுரை தெர்மாகோல் சயிண்டிஸ்ட் @SellurKRajuoffl -யை, இந்த செய்தியை பார்த்த பின் நேரில் வந்து மின் கம்பிகளை பிடித்து ஆய்வு செய்ய அழைக்கின்றோம்..ஆலங்குளம் துணை மின் நிலையத்து மின் பிரச்சினைகளுக்கு அணில்கள் காரணமென, 2020ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் அப்போதைய அதிமுக அரசு அளித்த விளக்கம் இது. பார்க்க படித்தவர் போலிருக்கும் செல்லூர் ராஜூ இதைப்பற்றி முன்னாள் மின் துறை அமைச்சர் தங்கமணியிடமோ உயர்நீதி மன்றத்திடமோ கேட்டு புத்தி தெளிய வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

Tags :

Share via