ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் எட்டாவாவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் வாங்கிய பொருளுக்கு உள்ளூர் கடைக்காரரிடம் ரூ.20 கொடுக்க முடியவில்லை. இதனால், இளைஞரை கடைக்காரருடன் சேர்ந்து பலர் அடித்து உதைத்தனர். அவர்களின் அடியை அந்த இளைஞனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. உடனே அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் ஓடி, வேகமாக வந்த ரயிலில் அடிபட்டு இறந்தார்.இந்த கொடூர சம்பவம் டிசம்பர் 11, ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் குறித்து போலீசார், இளைஞரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
Tags :