கிணற்றில் பெண் உடல் மீட்பு

by Staff / 15-12-2022 01:12:24pm
கிணற்றில் பெண் உடல் மீட்பு

நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே உள்ள பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி புஷ்பா என்கிற குள்ளாயி (வயது 57). மணி ஏற்கனவே இறந்து விட்டதால் புஷ்பா தனது அக்காள் சரசு வீட்டில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார்.இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி புஷ்பா வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தவர் பின்னர் வெளியில் சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து உறவினர்கள் புஷ்பாவை பல்வேறு இடங்களில் தேடினர். இந்த நிலையில் நேற்று காலை பாண்டமங்கலம் அருகே வட்டாரக்காடு பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பெண் உடல் மிதப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர்.

பின்னர் போலீசார் விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தது காணாமல் போன புஷ்பா என்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பா கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via