தண்ணீர் லாரி மோதி மாணவன் பலி

by Staff / 23-12-2022 04:25:14pm
தண்ணீர் லாரி மோதி மாணவன் பலி

சென்னை அருகே செம்மஞ்சேரி, பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் ஹரிஹரன், 11. இவர், ஓ. எம். ஆர். , சாலை நாவலுாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று காலை 9: 00 மணியளவில், அவர், செம்மஞ்சேரியில் இருந்து நாவலுாருக்கு, அரசு பேருந்தில் வந்தார். பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பின், ஓ. எம். ஆர். , மற்றும் சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு நடந்து சென்றார்.அப்போது, சர்வீஸ் சாலையில் சென்ற தனியார் தண்ணீர் லாரி, பள்ளி மாணவன் மீது மோதியதில், மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தாழம்பூர் போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.உயிரிழந்த பள்ளி மாணவன் ஹரிஹரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். லாரி ஓட்டுனர் மதனை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via