முளைக்கட்டிய தானியங்கள் கொண்டு சத்து மாவு தயாரிக்கும் முறை....

by Editor / 30-06-2021 06:13:44pm
முளைக்கட்டிய தானியங்கள் கொண்டு சத்து மாவு தயாரிக்கும் முறை....


உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கை தானியங்கள் சிறந்த உணவாகும். அந்த வகையில் 
முளைக்கட்டிய தானியங்கள் கொண்டு சத்து மாவு தயாரித்து நம் உணவில் சேர்ப்பது நல்லது.

தேவையான பொருட்கள்

1.ராகி 250கி
2.சோளம் 250கி
3.நாட்டு சர்க்கரை 500கி
4.பாசிப்பயறு 250கி
5.கொள்ளு 250கி
6.மக்காசோளம் 250கி
7.பொட்டுக்கடலை 100கி
8.சோயா 100கி
9.தினை 100கி
10.கருப்பு உளுந்து 100கி 
11.சம்பா கோதுமை 250கி
12.பார்லி 100கி
13.நிலக்கடலை 250கி
14.மாப்பிள்ளை சம்பா அவல் 250கி
15.ஜவ்வரிசி 100கி
16.வெள்ளை எள் 100கி
17.கசகசா 50கி
18.ஏலம் 50கி
19.முந்திரி 50கி
20.சாரப்பருப்பு 50கி
21.பாதாம் 50கி
22.ஓமம் 50கி
23.சுக்கு 50கி
24.பிஸ்தா 50கி
25.ஜாதிக்காய் 2 
26.மாசிக்காய் 2

செய்முறை :
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார்
◆சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். 
◆தானியங்களை இந்த அளவு வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும். 

பயன்படுத்தும் முறை மற்றும் மருத்துவ பயன்கள்
1. ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும். 
2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும். 
3. அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம். 
4. எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம். காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும். 
5. இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. 
6. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. 
7. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். 
8. முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு. 
குறிப்பு: 5 மாதம் வரை இந்த பவுடர் கெடாது. 

1. சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 5 மாதம் வரை கெடாது. 
2. பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை. 
இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள். 
குறிப்பு : காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள். உடலுக்கு மிக நல்லது
---------------------------------------------
செரிமானக் கோளாறு நீங்க:-
தே.பொருட்கள்..
கடுக்காய் – 50 கிராம்
இந்துப்பு – 50 கிராம்
கருஞ்சீரகம் – 50 கிராம்
ஓமம் – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
சுக்கு – 50 கிராம்
திப்பிலி – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
உலர்ந்த கொத்தமல்லி இலை – ¼ கிலோ
உலர்ந்த கறிவேப்பிலை இலை – ¼ கிலோ

     இவை அனைத்தையும் ஒன்று கலந்து தூளாக்கவும். இதில் காலை, மதியம், இரவு மூன்று வேளை உணவுக்குப்பின் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர, செரிமானக் கோளாறுகள் நீங்கும். நுரையீரல் பலப்படும். வாயு, வயிற்று உப்புசம் தீரும்.....

 

Tags :

Share via