மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை
மின்சார வாரிய ஊழியர்கள் நாளை நடைப்பெற உள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாளை நடைப்பெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
Tags :