கேரளாவுக்கு கடத்தப்பட்ட 22 டன் ரேஷன் அரிசி பிடிப்பட்டது.

by Editor / 22-01-2023 08:40:07pm
கேரளாவுக்கு கடத்தப்பட்ட 22 டன் ரேஷன் அரிசி பிடிப்பட்டது.

தமிழகத்திலிருந்து தென்காசி மாவட்டம் புளியரை வழியாக  கேரளம் மாநிலத்திற்கு தினமும் 24 மணிநேரமும் ஆயிரக்கணக்காண வாகனங்களில் பல்வேறு பால்,காய்கறி,இறைச்சி கோழிகள்,அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள்கொண்டுசெல்லப்பட்டுவருகிறது.இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 
புளியரை காவல்துறை வாகனசோதனைச்சாவடியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு ஆய்வாளர் கலா தலைமையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் தலைமை காவலர்கள் ராஜ்குமார் ,போத்தி  ராஜா போலீசார் மற்றும் சோதனைச்சாவடி போலீசாரும்  வாகன தணிக்கை செய்தனர்.அப்போது விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லோடு என்ற பகுதிக்கு சரக்கு ஏற்றி வந்த லாரியை சோதனை செய்ததில் அந்த லாரியில் முழுக்க முழுக்க ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.இதனைத்தொடர்ந்து லாரியையும்லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 382 மூட்டை ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்யப்பட்டது.இதை தொடர்ந்து போலீசார் லாரியின் உரிமையாளரும் லாரியை ஒட்டி வந்தவருமான கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருவனந்தபுரம் மாவட்டம் கல்லோடு என்ற பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை  கைது செய்தனர். இதுகுறித்து திருநெல்வேலி சிவில் சப்ளை  சிஐடி பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via