இரண்டு குடிசைகள் தீயில் கருகி சாம்பல்

by Staff / 29-01-2023 04:10:31pm
இரண்டு குடிசைகள் தீயில் கருகி சாம்பல்

சேந்தமங்கலம் ஒன்றியம் கல்குறிச்சி வெள்ளாளப்பட்டி அணைக்கட்டு காட்டு கொட்டாயி பகுதியைச் சேர்ந்த பெருமாள் விவசாயி இவரது மகன்கள் மும்மூர்த்தி(32) வரதராஜன்(30) விவசாயம் செய்து வருகின்றனர். இருவரும் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அருகருகே கூரை அமைத்து வசித்து வந்தனர். இந்நிலையில் வரதராஜன் என்பவருக்கு சொந்தமான கூரை வீட்டில் திடீரென ஏழு மணி அளவில் தீப்பிடித்துக் கொண்டது. அதிர்ச்சி அடைந்தே இரு குடும்பத்தினரும் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. வீட்டின் அருகே அமைக்கப்பட்டு இருந்த ஆட்டுக்கொட்டாயிலும் தீப்பிடித்து விட்டது. அதிலிருந்து ஆட்டுக்குட்டிகளும் தீயில் கருகி இறந்தன. விபத்தில் இரு குடிசைகளும் இருந்து சாம்பலானது.

 

Tags :

Share via