விமானம் அவசரமாக தரையிறக்கம்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று CIAL செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சர்வதேச விமான நிலையத்தில் இரவு 8.04 மணிக்கு முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, 8.26 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இரவு 8.36 மணிக்கு அவசரநிலை வாபஸ் பெறப்பட்டு விமானச் செயல்பாடுகள் இயல்பானதாக அறிவிக்கப்பட்டது.
Tags :