எல்லையில் பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தால் பரபரப்பு
பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் செக்டார் பகுதியில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் பறந்த ஆளில்லா விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்த ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். துப்பாக்கிச் சூடு நடத்தி ட்ரோன் கைப்பற்றப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து 3 கிலோ ஹெரோயின், சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மகசீன் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள பகுதிகளில் பிஎஸ்எஃப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :