அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கன்னியாகுமரி வருகை

by Staff / 21-02-2023 12:53:01pm
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கன்னியாகுமரி வருகை

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வருகை தந்தார், பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் "இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில் கடந்த 21 மாத கால திமுக ஆட்சியில் 510 திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களுக்கு தமிழக அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 112 கோவில்களுக்கு திருப்பணிகள் நடந்து வருகிறது இதேபோன்று ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 12, 500 கோவில் விளக்கு தல ஒரு லட்சம் வீதம் வழங்கப்பட்டு வந்ததை தமிழக முதல்வர் 2 லட்சமாக உயர்த்தி வழங்கி உள்ளார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடை விழாவை ஒட்டி சமய சொற்பொழிவு பிரச்சனை தொடர்பாக அறநிலை துறை அதிகாரிகளுடன் கலந்து பேசிய பின்னர் இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

 

Tags :

Share via