ஸ்டாலின் உட்பட 6 மாநில  முதலமைச்சர்களுடன் மோடி 16–ந்தேதி ஆலோசனை

by Editor / 14-07-2021 03:38:21pm
 ஸ்டாலின் உட்பட 6 மாநில  முதலமைச்சர்களுடன் மோடி 16–ந்தேதி ஆலோசனை



கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி 16-ந்தேதி ஆலோசனை மேற்கொள்கிறார்.
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலைக்கு எதிராக நாடு தீவிரமாக போராடிக்கொண்டிருக்கிறது. கொரோனா தினசரி பரவல், உயிரிழப்புகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலில் கவலைக்குரியதாக காணப்படுகிற 8 வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலிக்காட்சி வழியாக கலந்துரையாடினார். அப்போது அவர் மலைவாழிடங்கள், சந்தைகள் போன்றவற்றில் முககவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் கூட்டம் கூடுவது குறித்து கவலை தெரிவித்தார்.இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலாக அதிகரித்துள்ள மாவட்டங்களைக் கொண்டுள்ள அல்லது மற்ற மாநிலங்களில் இருப்பதைப்போல தொற்று பரவலில் சரிவை சந்திக்காத மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அவர் உரையாட உள்ளார்.
அந்த வகையில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலிக்காட்சி வழியாக 16-ந்தேதி (நாளை மறுதினம்) கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிற 5 மாநில முதலமைச்சர்களான ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), எடியூரப்பா (கர்நாடகம்), நவீன் பட்நாயக் (ஒடிசா), உத்தவ் தாக்கரே (மராட்டியம்), பினராயி விஜயன் (கேரளா) ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அப்போது தொடர்புடைய மாநிலங்களில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

 

Tags :

Share via