கர்நாடகாவை  கலக்கிய பிரதமர் மோடி-தொண்டர்கள் உற்சாகம். 

by Editor / 06-05-2023 05:05:54pm
கர்நாடகாவை  கலக்கிய பிரதமர் மோடி-தொண்டர்கள் உற்சாகம். 

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே 10ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக பிரதமர் மோடி, அம்மாநிலத்தில் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை பெங்களூரு சென்றடைந்த அவர், பிரமாண்ட சாலைப் பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஜேபி நகரில் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது சாலையின் இருபுறமும் நின்று அவர்கள் மலர் தூவினர்.ஆபத்தைக்கூட உணராமல்  மின்கம்பத்தை ஒட்டிய மரக்கிளையில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் ஏறி அமர்ந்து மோடியை வரவேற்ற சம்பவம் ஒருபக்கம் மகிழ்ச்சியை ஏற்ப்டுத்தினாலும் மறுபக்கம் காண்போருக்கு அச்சமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவை  கலக்கிய பிரதமர் மோடி-தொண்டர்கள் உற்சாகம். 
 

Tags :

Share via