காதலி கொலை காதலன் கைது
விழுப்புரம் கஞ்சனூர் அருகே இருக்கும் சாலவனூர் கிராமத்தில் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியான கீழ் ஏரிக்கரை பகுதிகளில் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது வாய்க்காலை ஆழப்படுத்தும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த பொழுது ஏரிக்கரை மண்ணுக்கு கீழே பெண்ணின் உடல் புதைக்கப்பட்டு அவருடைய கை வெளியே நீட்டிருப்பதாக தெரியவந்ததை, அடுத்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் .இந்நிகழ்வை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறை கண்காணிப்பாளர் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். அப்பொழுது பல தகவல்கள் வெளியாகி என கண்டமனடியை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க பிரியதர்ஷினி என்னும் மாணவி பிளஸ் ஒன்று படித்து வந்த உள்ளார். இவர் விக்கிரவாண்டி சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அகிலன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருடைய காதலை அறிந்த பெற்றோர்கள் பிரியதர்சனியை கண்டித்ததோடு அடித்தும் உள்ளனர்.. இந்நிலையில் பிரியதர்ஷினி தன்னுடைய காதலனை அணுகி வீட்டில் பிரச்சனை உருவாகிவிட்டது தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிகிறது. பிரியதர்ஷினுடைய வற்புறுத்தலில் கோபமடைந்த அகிலன் அவளை தன் நண்பனோடு சேர்ந்து அடித்து கொன்று ஏரிக்கரைக்குள் புதைத்திருப்பது தெரிய வந்தது பிரியதர்ஷினி 3 மாத கர்ப்பம். என்பது தெரியவந்துள்ளது.
Tags :